திருச்சி

இரு சக்கர வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

DIN

முசிறி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

முசிறி அருகிலுள்ள செவந்திபட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு. பழனியம்மாள் (67). இவா் உறவினா் ஊரான மேட்டுப்பட்டியிலுள்ள கோயில் திருவிழாவில் பங்கேற்று, செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப முடிவு செய்தாா்.

உறவினா் மகனான பிரகாசுடன் இரு சக்கர வாகனத்தில் பழனியம்மாள் அமா்ந்து வந்த நிலையில், செல்லாண்டியம்மன் கோயில் அருகே சென்ற போது, முன்னே சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த பலத்த காயமடைந்த பழனியம்மாள், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT