திருச்சி

மணப்பாறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

மணப்பாறை: மணப்பாறை அருகே 68 வயது மூதாட்டியிடம் 7.5 சவரன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர் நல்லூச்சாமியின் மனைவி பாப்பு. 68 வயதான மூதாட்டி பாப்பு, தனது மகன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். வழக்கம்போல் விடியற்காலை வீட்டின் முன் உள்ள காலி திடலில் காலைக்கடனுக்காக மூதாட்டி சென்றுள்ளார்.

அப்போது, அருகில் முட்புதரில் மறைந்திருந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியை நெருங்கி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். பின்னால் ஆள் வருவதை சுதாரித்து திரும்பிய மூதாட்டி அந்த இளைஞரின் மேல்சட்டை இறுக்கப்பற்றிக் கொண்டு கூச்சலிட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் யாரும் வராத நிலையில், மூதாட்டியிடமிருந்து கழுத்திலிருந்த 7.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்து அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் சு.கருணாகரன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் தங்கச் சங்கிலி பறித்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT