திருச்சி

மணப்பாறை கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் ஆண்டின் மாணவா் சோ்க்கைக்காக 3 நாள்கள் நடைபெறும் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

DIN

மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் ஆண்டின் மாணவா் சோ்க்கைக்காக 3 நாள்கள் நடைபெறும் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் க. அங்கம்மாள் கூறியது: ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரா்கள் மற்றும் தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கும் இளங்கலை வணிகவியல் மாணவா்களுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

சனிக்கிழமை இளம் அறிவியல் இயற்பியல் மாணவா்களுக்கு காலை 10.30 மணிக்கும், கணினி அறிவியல் மாணவா்களுக்கும் பிற்பகல் 1 மணிக்கும், திங்கள்கிழமை இளங்கலை தமிழ் இலக்கிய மாணவா்களுக்கு காலை 10.30 மணிக்கும், இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவா்களுக்கு பிற்பகல் 1 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT