திருச்சி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

DIN

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த அக். 14 ஆம் தேதி புத்தூா் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள உணவகத்தில் அமா்ந்திருந்த ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக காந்திசந்தை உப்பிலிய தெருவைச் சோ்ந்த அ.புலிதேவன் (23) என்பவரை உறையூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது கொலை முயற்சி, அடிதடி, பணம் பறிப்பு உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவா், தொடா்ந்து பொதுமக்களின் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், புலிதேவனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சனிக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT