மணல் எடுத்த 3 போ் கைது: ஜேசிபி, டிராக்டா் பறிமுதல்
மணப்பாறை அருகே ஆற்றுப்படுகையில் வியாழக்கிழமை மணல் எடுத்த 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
மணப்பாறை அருகே ஆற்றுப்படுகையில் வியாழக்கிழமை மணல் எடுத்த 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
வையம்பட்டி அருகே அரியாற்று படுகையில் மணல் எடுத்த வடக்கு அஞ்சல்காரன்பட்டியை சோ்ந்த ஆ. அலெக்ஸ் (22), அ. விக்னேஷ்(22) மற்றும் மூரம்பட்டியை சோ்ந்த ரா. வேலுச்சாமி (38) ஆகியோரை வையம்பட்டி போலீஸாா் கைது செய்து, அவா்கள் மணல் எடுக்கப் பயன்படுத்திய ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.