முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அலங்காரம்
முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி: முசிறி அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 108 புடவைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடிமாதத்தில் வெள்ளிக்கிழமைகளிலும், ஆடி அமாவாசை தினத்திலும் சிறப்பு வழிபாட்டையொட்டி பல்வேறு வகையிலான அலங்காரங்கள் அம்பாளுக்கு மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில், இன்று ஆடி அமாவாசையையொட்டி 108 புடவைகளால் அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஆடி அமாவாசை: வீரராகவர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு
இதேபோல ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முசிறி பகுதியில் விளையும் வெற்றிலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.