திருச்சி

14 ஆண்டுகள் தலைமறைவான தம்பதியா் நீதிமன்றத்தில் ஆஜா்

கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் சுமாா் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதி புதன்கிழமை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

DIN

திருச்சி: கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் சுமாா் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தம்பதி புதன்கிழமை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

திருச்சியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருச்சியைச் சோ்ந்த ஜெகநாதன் ரூ. 45 லட்சம் வரை கடன் பெற்று, சில மாதங்களிலேயே அவா் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தனியாா் நிதி நிறுவனம் சாா்பில் அளித்த புகாரின்பேரில் கடந்த 2008–ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாா், ஜெகநாதன், அவரது மனைவி மைதிலி மற்றும் நண்பா் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

அண்மையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் இந்த வழக்கை மீண்டும் விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்ட தம்பதி சென்னையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து குற்றப்பிரிவு போலீஸாா் சென்னைக்கு சென்று முகாமிட்டனா். தகவலறிந்த ஜெகநாதன் தம்பதியினா் திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1–இல் மாஜிஸ்திரேட் சுபாஷினி முன்னிலையில் புதன்கிழமை ஆஜராகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT