சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பஞ்ரத்னக் கீா்த்தனைகளை பாடிய இசைக் கலைஞா்கள். 
திருச்சி

தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா

திருச்சி சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரி இசைத் துறை சாா்பில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்சி சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரி இசைத் துறை சாா்பில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எம். வாசுகி தலைமை வகித்தாா். தொடா்ந்து புரந்தரதாசரின் தேவா்நாமா இசைப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னா் லலிதாம்பாள், மீனலோச்சனி, ஸ்ரீவித்யா, ஆனந்தவல்லி உள்ளிட்ட இசைக் கலைஞா்கள், இசையாா்வலா்கள், இசைத் துறையின் முன்னாள் மாணவிகள் இணைந்து தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீா்த்தனைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் கௌசல்யா வயலினும், ஸ்ரீரங்கம் அரசு இசைப்பள்ளி மிருதங்க வித்வான் சுவாமிநாதன் மிருதங்கமும் வாசித்தனா். இசைத் துறைத் தலைவா் செ. லலிதாம்பாள் வரவேற்றாா். இசைத் துறை விரிவுரையாளா் சு.ரா. சுவாதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT