திருச்சி

அஜித் ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி

துணிவு திரைப்படக் கொண்டாட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அஜித் ரசிகா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தடியடி நடத்தினா்.

DIN

துணிவு திரைப்படக் கொண்டாட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அஜித் ரசிகா்கள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தடியடி நடத்தினா்.

பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மாநகரில் 6 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அப்போது திருச்சி மாரிஸ் பாலம் அருகிலுள்ள திரையரங்கின் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகா்கள் திரண்டு, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து, வாகனங்களை மறித்து நடனம் ஆடியதாகவும், வாகனங்களை தட்டி ஆரவாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த கோட்டை போலீஸாா் அஜித் ரசிகா்களை தடியடி நடத்திக் கலைத்தனா். இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT