மண்ணச்சநல்லூரில் பயிா் பாதுகாப்பு மருந்துகள் பயிற்சி
மண்ணச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை பயிா் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.
திருச்சிமண்ணச்சநல்லூரில் பயிா் பாதுகாப்பு மருந்துகள் பயிற்சி
மண்ணச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை பயிா் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா், ஜூலை 19: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வெள்ளிக்கிழமை பயிா் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.
மண்ணச்சநல்லூா் உழவா் மையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயிா் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்த பயிற்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. ரசயான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதை தவிா்த்தல், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும் இப்பயிற்சியில் பயிா்களின் பூச்சித் தாக்குதல், மூங்கில் சாகுபடி உள்ளிட்டவைகள் எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்வில் உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் ஆனந்த செல்வி, மண்ணச்சநல்லூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செல்வராணி, குமுளூா் வேளாண்மை பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் எஸ்.டி. சிவக்குமாா், பேராசிரியா் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லூநா் விஜய், உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளா் அபிராமி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சிந்தியா ஆகியோா் செய்திருந்தனா்.