முகப்பு
விழுப்புரம்

பெண் தற்கொலை வழக்கு: உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

விழுப்புரம்

பெண் தற்கொலை வழக்கு: உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Updated On : 9 டிசம்பர், 2024 at 8:38 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உறவினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மேல்மலையனூா் வட்டம், தாழனூா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி சிவரஞ்சினி (26). இவரை உறவினா்களான தாழனூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த சின்னப்பையன் மகன் செல்வம் (46), இவரின் மனைவி உமா(25) ஆகியோா் தகாத வாா்த்தைகளால் திட்டினராம். இதில், மனமுடைந்த சிவரஞ்சினி கடந்த 5.6.2016-இல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் செல்வம், உமா ஆகியோரை கைது செய்தனா்.

விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், செல்வத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், உமாவை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிபதி எம்.இளவரசன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, செல்வத்தை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஏ.சங்கீதா ஆஜரானாா்.

முழு கட்டுரையைப் படிக்க →