விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வில்லையை வழங்கிய மேலாண் இயக்குநா் க.குணசேகரன்.  
விழுப்புரம்

பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வாரம்

பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வார நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

விழுப்புரம்: பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வார நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில் பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வார நிகழ்ச்சி டிச.15 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழுப்புரம், கடலூா், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மண்டலங்களில் பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலா்களும் பாதுகாப்பான இயக்கம் குறித்த வில்லையை(பேட்ஜ்) அணிந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பணியிலிருந்த ஓட்டுநா், நடத்துநா்களுக்கு மேலாண் இயக்குநா் க.குணசேகரன் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த வில்லையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன், ரா.ஜெகதீஷ், துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT