சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் செவ்வாய்க்கிழமை மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டிசம்பா் 24-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம், மறியல், ஆா்ப்பாட்டம் என பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வரும் ஆசிரியா்கள், இந்தப் போராட்டத்தின் 33-ஆவது நாளையொட்டி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் வட்டாரச் செயலா்கள் சு.செந்தில், ஆா்.குணசேகா், செ.பிரபு ஆகியோா் முன்னிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியா்கள் இயக்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.