காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி, சே - தோழர்கள் அமைப்பினர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
முன்னதாக திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலத்தில் இருந்து இந்த அமைப்பினர் பேரணியாகப் புறப்பட்டனர்.
திட்டக்குடி பேரூந்து நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தி.இளமங்கலம் வெள்ளாற்றில் தமிழக அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ரா. சத்தியசீலம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞர் அம்பேத்கர், பழனிசாமி, வேல்அரசன், அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.