கண்கள் தானம்
சிதம்பரம் அருகே உள்ள கீழ்புவனகிரி சௌராஷ்டிரா தெருவைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தி (74) செவ்வாய்க்கிழமை காலமானார்.
சிதம்பரம் அருகே உயிரிழந்தவரின் கண்கள் தானம் அளிக்கப்பட்டன.
சிதம்பரம் அருகே உள்ள கீழ்புவனகிரி சௌராஷ்டிரா தெருவைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தி (74) செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், புவனகிரி அரிமா சங்கம் ஆகியவை சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகி ரமேஷ், புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் மேகநாதன், ரகுராமன் ஆகியோர் செய்தனர்.