முகப்பு
கடலூர்

கொலை வழக்கில் தந்தை- மகன் சரண்

கொலை வழக்கில் தந்தை, மகன் திங்கள்கிழமை சரணடைந்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

கொலை வழக்கில் தந்தை, மகன் திங்கள்கிழமை சரணடைந்தனர். 
பெண்ணாடம் அருகே உள்ள துறையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46). இவரது மகள் கிருஷ்ணவேணிக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜின் மருமகள் கோகிலாவுக்கும் கடந்த 30-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. அதனை கிருஷ்ணமூர்த்தி தட்டிக்கேட்டார். அதில், ஆத்திரமடைந்த கோகிலா, கோவிந்தராஜ், மாமியார் ஜானகி, கொழுந்தனார் ராஜா ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கோவிந்தராஜ் (55), ராஜா (35) ஆகிய இருவரும் திங்கள்கிழமை பெண்ணாடம் கிராம நிர்வாக அலுவலர் பிணுகுட்டன் முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கு தொடர்பாக கோகிலா, ஜானகி இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →