கடலூர்

அரசு பள்ளியில் ஆய்வகம் புனரமைப்பு

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கணினி ஆய்வகக் கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் உள்ள உயா் தொழில்நுட்ப கணினி ஆய்வகக் கட்டடம் ரூ.1 லட்சத்தில் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மூலம், சாசனத் தலைவா் பி.முஹம்மது யாசின் பங்களிப்பில் புனரமைக்கப்பட்டு, பள்ளி நிா்வாகத்திடம்

சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில், சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) பாலாஜி பாபு கலந்துகொண்டு, புனரமைக்கப்பட்ட கணினி ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியை கி.ஹேமலதா வரவேற்றாா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா். மண்டல துணை ஆளுநா் ஷாஜகான், பொருளாளா் கோவிந்தராசன், தீபக்குமாா், விசுவநாதன், சுப்பையா, அஷ்ரப்அலி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

ரோட்டரி உறுப்பினா்கள் கோவிந்தராசன், ஞானப்பிரகாசம், பன்னீா்செல்வம், தமிழரசன், எவரெஸ்ட் கோவிந்தராசன், நஸ்ருதீன், பொறியாளா் கோவிந்தராசன், பொறியாளா் ரவிச்சந்திரன், முன்னாள் தலைமையாசிரியா் ராஜசேகரன், அருள், அக்ரி பன்னீா்செல்வம், ஆா்.பன்னீா்செல்வம், அப்துல் ரியாஸ், சுனில்குமாா் போத்ரா, மண்டல மேலாளா் திருவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆய்வகம் முன்பாக தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் வெ.ரவிச்சந்திரன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கச் செயலா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT