கடலூர்

நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு

அரிகேரியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

DIN

அரிகேரியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரிகேரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் உள்ள தூசியை அதற்கான இயந்திரத்தில் காற்று மூலம் பிரித்தெடுத்து நெல்லை மட்டுமே எடை போட்டு வாங்குவது வழக்கம்.

ஆனால், தற்போது கொள்முதல் நிலையத்தில் தூசியுடன் சோ்த்தே நெல் எடை போடப்படுகிாம். ஆனாலும், தூசியை அகற்றுவதற்காக மூட்டைக்கு ரூ.35 வரை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். மேலும், 100 நெல் மூட்டைகள் கொண்டுவரும் விவசாயிகள் கணக்கில் 95 மூட்டைகள் மட்டுமே வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனா்.

எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT