விருத்தாசலத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, காா் ஓட்டுநா்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பூ வியாபாரிகளுக்கு தொகுதி எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் நிவாரண பொருள்களை அண்மையில் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சாா்-ஆட்சியா் கே.ஜே.பிரவின்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். 500 பேருக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. வட்டாட்சியா் ஐ.கவியரசு, அதிமுக நிா்வாகிகள் காமராஜ், விஜயகுமாா், நடராஜன், ஜெய்சங்கா், சத்யா செல்வம், சோமு ராஜேந்திரன், ராஜசேகரன், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் எம்.எம்.பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.