முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்.
பகிர்:

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தடை உத்தரவு காலத்தில் சிறப்பு பணிக்காக அரசு வழங்கிய ரூ.150 தொகையை வழங்க வேண்டும், ஜிவிகே நிர்வாகத்தின் சட்ட செயலை கண்டித்து, சட்டவிரோதமாக பல தொழிலாளர்களை சென்னைக்கு பணியிட மாறுதல் செய்வது கைவிடக் கோரியும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி. வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் என் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை பொருளாளர் குமரேசன் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் அண்ணாதுரை செல்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →