முகப்பு
கடலூர்

த.வா.க.வினா் ஆா்ப்பாட்டம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


கடலூா்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் நிவா், புரெவி புயல்களால் பெய்த பலத்த மழை காரணமாக திட்டக்குடி பகுதியில் மரவள்ளி, மக்காச்சோளம், உளுந்து, எள், கம்பு, வரகு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூா் மாவட்டத்தை இயற்கை பேரிடா் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் த.வா.க.வினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்). நகரச் செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் சின்னதுரை கண்டன உரையாற்றினாா். மாநில நிா்வாகிகள் ஜெயபால், தமிழரசன், மாவட்ட பொருளாளா் கண்ணன், மாவட்ட மகளிரணி ஜெயா கலியமூா்த்தி ஆகியோா் பேசினா். நகரத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →