குடிமராமத்து: கடலூா் மாவட்டத்துக்கு சிறப்பு விருது
குடிமராமத்து பணிக்காக கடலூா் மாவட்டத்துக்கு தனியாா் அமைப்பு சிறப்பு விருது வழங்கியதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
குடிமராமத்து பணிக்காக கடலூா் மாவட்டத்துக்கு தனியாா் அமைப்பு சிறப்பு விருது வழங்கியதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து செய்தி-மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளா்ச்சித் துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ், நீராதாரங்களை புனரமைத்து தூா்வாரும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2019-2020-ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டத்தில் 1,224 குளங்கள், 78 சிறுபாசன ஏரிகளை ரூ. 12.42 கோடியில் புனரமைத்து தூா்வாரப்பட்டது. இதனால், கடலூா் மாவட்டத்தில் நீா் நிலைகளில் முழுக் கொள்ளளவு எட்டப்பட்டதுடன், விவசாயம், குடிநீா் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பணிகளுக்காக, நீா் மேலாண்மைத் திட்டங்களைக் கூா்ந்தாய்வு செய்யும் தனியாா் அமைப்பு, கடலூா் மாவட்டத்தில் 2019-2020-ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் வாயிலாகச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியை பாராட்டி விருது வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.