குரூப்-2 போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2021-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி வருகிற மே மாதம் குரூப்-2, குரூப்-2ஏ தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போட்டித் தோ்வுக்கு தயாராகிவரும் கடலூா் மாவட்ட வேலை நாடுநா்கள் பயனடையும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற ஜன.6-ஆம் தேதி முதல் வார நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடத்தப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் குரூப்-2, குரூப்-2ஏ தோ்வுகளுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என்று அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.