முகப்பு
கடலூர்

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பெண்கள் 300 பேருக்கு நிவாரண உதவி

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  சிதம்பரம் மந்தக்கரை செல்லியம்மன் கோயில் அருகே கவரிங் கடைகளில் வேலை செய்யும் கணவரை இழந்த ஏழை எளிய பெண்களுக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  சிதம்பரம் மந்தக்கரை செல்லியம்மன் கோயில் அருகே கவரிங் கடைகளில் வேலை செய்யும் கணவரை இழந்த ஏழை எளிய பெண்களுக்கு 300 பேருக்கு அரிசி மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  நகர தலைவர் தில்லை. ஆர். மக்கின் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ஏ. நெடுஞ்செழியன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு கவரிங் கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தில்லை. சீனு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி தலைவி ராஜலட்சுமி, மாவட்ட தொண்டர் அணி தலைவர் தில்லை. கோ. குமார், நகர நிர்வாகிகள் இளங்கோவன், சின்ராஜ், பாலகுரு, ஒன்றிய கவுன்சிலர் எம்.கே.பாலா, வட்டாரத் தலைவர் பகவத்சிங், மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் தில்லை .செல்வி, சுப்புலட்சுமி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கோ. ஜனகம், மீனா செல்வம், நிர்வாகிகள் அழகர் மாலா, ராதா, ருக்மணி, மாலா, பா.ம.க நகர தலைவர் ஞானகுரு, நிர்வாகிகள் கீரை. முருகன், பூராசாமி, மருத்துவ அணி தலைவர் டாக்டர். பாரிநெடுஞ்செழியன், டாக்டர்.முபாரக் அலி, நகர இளைஞரணி தலைவர் துரை. சிங்காரவேலு, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்குகின்றனர். முடிவில் நகர பொருளாளர் எஸ். எஸ் நடராஜன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →