முகப்பு
கடலூர்

நாட்டுப்புறக் கலைஞா்கள் ஆலோசனை

பண்ருட்டியில் நாடக நடிகா்கள், அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

பண்ருட்டியில் நாடக நடிகா்கள், அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கௌரவ சிறப்பு அழைப்பாளா் எஸ்.வைரக்கண்ணு தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் குரு.சுப்பிரமணியன், வடலூா் கோவி.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் எஸ்.சிவனேசன், செயலா் ஜி.குணாளன், பொருளாளா் எஸ்.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வருகிற டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள எழுச்சி மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேடை நாடகக் கலைஞா் முரளி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →