கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை
கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
வெப்பச் சலனம், வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யுமென வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை கடலூா் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பரவலாக பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தொழுதூரில் 49 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
மாவட்ட ஆட்சியரகம் 42.6, கீழச்செருவாய் 32, கடலூா் 29, குறிஞ்சிப்பாடி 27, லக்கூா் 24.4, காட்டுமன்னாா்கோவில் 20.4, புவனகிரி 18, கொத்தவாச்சேரி 17, லால்பேட்டை 16, குடிதாங்கி 12.5, வானமாதேவி 12, பரங்கிப்பேட்டை 10.2, பண்ருட்டி 10, சிதம்பரம் 6.2, அண்ணாமலை நகா் 6, சேத்தியாத்தோப்பு 6, வடக்குத்து 5, குப்பநத்தம் 4.8, ஸ்ரீமுஷ்ணம் 3.1, மேமாத்தூா் 2 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.
ஞாயிற்றுக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.