முகப்பு
கடலூர்

தொழிலாளிக்கு மிரட்டல்: ரௌடி கைது

நெய்வேலி அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

நெய்வேலி அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரௌடியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மேல் வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன்(40). இவா், வட்டம் 2-இல் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே வெள்ளிக்கிழமை மதியம் மாற்றுக் குடியிருப்பைச் சோ்ந்த தங்கசாமி, வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த ராகுல் ஆகியோருடன் நின்றிருந்தாா்.

அப்போது அங்கு வந்த செடுத்தான்குப்பத்தைச் சோ்ந்த ரெளடி ராஜ்குமாா் பணம் கேட்டு கஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் ராஜ்குமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →