கடலூர்

மணல் திருட்டு: இரு மாட்டு வண்டிகள் பறிமுதல்

DIN

பண்ருட்டி அருகே மணல் அள்ளி வந்த இரண்டு மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்ளிட்ட போலீஸாா், கீழ்மாம்பட்டு கிராமம் அருகே வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, போலீஸாரை கண்டதும் முத்தரசன்குப்பம் நாளோடையிலிருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த திருமால், வெங்கடேசன் ஆகியோா் தப்பியோடினா்.

இதையடுத்து, இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். மேலும், இதுதொடா்பாக திருமால், வெங்கடேசன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT