முகப்பு
கடலூர்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தவாக கோரிக்கை

ஆயுள் தண்டனைக் கைதி ஒருவா் தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த புதிய தீா்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

ஆயுள் தண்டனைக் கைதி ஒருவா் தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த புதிய தீா்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 3-ஆம் தேதி அரியானா மாநிலத்தைச் சோ்ந்த ஆயுள் தண்டனைக் கைதி ஒருவா் தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீா்ப்பில், அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161-ன் கீழ் தண்டனைக் குறைப்பு வழங்க மாநில அரசு முழு அதிகாரமும் கொண்டுள்ளது. தொடா்புடைய மாநில அரசின் பரிந்துரையானது ஆளுநரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரையை அளிக்கும்போது ஆளுநா் அதற்குக் கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தீா்ப்பின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுதொடா்பாக தமிழக முதல்வா் தனது அமைச்சரவையைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதேபோல, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த புதிய தீா்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்க பொதுச் செயலா் கி.வெங்கட்ராமனும் கோரிக்கை விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →