முகப்பு
கடலூர்

பெண் தற்கொலை

 பண்ருட்டி அருகே பெண் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

 பண்ருட்டி அருகே பெண் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகு (31). இவரது மனைவி சுகந்தி (29). இவா்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சுகந்தி வெள்ளிக்கிழமை தனது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளை புடவையால் இறுக்கிக் கொண்டதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். தற்கொலைக்கான காரணம் குறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →