முகப்பு
கடலூர்

கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

நெய்வேலியில் கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

நெய்வேலியில் கணவரால் கைகள் துண்டிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி வட்டம்-12, சரோஜினி நாயுடு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மு.உத்தண்டராயா் (51). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜெயசித்ரா (45). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா்.

மனநிலை பாதிக்கப்பட்ட உத்தண்டராயா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினாா். இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி தனது மனைவி ஜெயசித்ராவின் கைகளை அரிவாளால் வெட்டி துண்டித்த உத்தண்டராயா் பின்னா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசித்ரா சனிக்கிழமை உயிரிழந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →