பள்ளி வாகன உரிமையாளா்களுடன் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகள் வரும் செப்.1-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வாகன உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பள்ளிகள் வரும் செப்.1-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வாகன உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முக்கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பண்ருட்டி ரவிச்சந்திரன், நெய்வேலி பிரான்சிஸ், போக்குவரத்து ஆய்வாளா் நல்லதம்பி மற்றும் அதிகாரிகள், வாகன உரிமையாளா்கள் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு வாகனங்கள் இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.