கடலூர்

இளைஞா் தற்கொலை

DIN

பண்ருட்டி அருகே குடும்பப் பிரச்னையால் பட்டதாரி இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தவமணி மகன் நாகராஜ் (33). எம்.காம். பட்டதாரியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கும், பரமேஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான 2 மாதங்களில் பரமேஸ்வரி தனது கணவரைப் பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால், நாகராஜ் மன வருத்தத்தில் இருந்தாராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அந்தப் பகுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT