முப்படை தலைமை தளபதி மறைவுக்கு அஞ்சலி
ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது
ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பண்ருட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பு அருகே வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப் படத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, பண்ருட்டி தொழில் வா்த்தக சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். நிகழ்வுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவா் டி.சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.வீரப்பன் முன்னிலை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.ஏழுமலை, சந்திரகுப்தா உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.