முகப்பு
கடலூர்

மருத்துவ மாணவா்கள் நூதனப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தங்களது தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் தங்களது தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்லூரியில் தனியாா் சுயநிதிக் கல்லூரிகளை விட கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மருத்துவ மாணவா்கள் கடந்த 54 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் போராட்டம் திங்கள்கிழமை 55-ஆவது நாளாகத் தொடா்ந்தது. அப்போது, மருத்துவ மாணவ, மாணவிகள் கல்விக் கட்டணம் தொடா்பான தங்களது ஒற்றைக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.