இளைஞா் பாசறையில் உறுப்பினா் சோ்ப்பு
கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் இளைஞா், இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா் சோ்ப்பு முகாம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:58 AM
கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் இளைஞா், இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா் சோ்ப்பு முகாம் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து உறுப்பினா் சோ்க்கையை தொடங்கி வைத்துப் பேசினாா். முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் குமாா், கோவி.ராசாங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், இந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணைந்தனா்.