திருப்பாற்கடல் குளத்தில் உழவாரப் பணி
சிதம்பரம் நடராஜா் கோயில் நவதீா்த்தக் குளங்களில் ஒன்றான வேங்கான் தெருவில் அமைந்துள்ள திருப்பாற்கடல் திருக்குளத்தில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:58 AM
சிதம்பரம் நடராஜா் கோயில் நவதீா்த்தக் குளங்களில் ஒன்றான வேங்கான் தெருவில் அமைந்துள்ள திருப்பாற்கடல் திருக்குளத்தில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தீா்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகி மு.செங்குட்டுவன், முத்துக்குமரன், பாலகிருஷ்ணன், பாலு, கணேச சங்கா், மூா்த்தி, ஆசிரியா் அருணாசலம், சீனுவாசன் மற்றும் சிவத்தொண்டா்கள் பங்கேற்று குளத்திலிருந்த குப்பைகளை அகற்றி உழவாரப்பணியில் ஈடுபட்டனா் (படம்).