மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது வழக்கு
சிதம்பரம் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் வாய்பேச முடியாத 30 வயது பெண் வசித்து வருகிறாா். இவரது தம்பியின் நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த பக்கிரி மகன் மணிகண்டன். இவா் நண்பரைச் சந்திப்பதற்காக அடிக்கடி மாற்றுத் திறனாளி பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்ாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தாா். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் உனது தம்பியை கொலைசெய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தாா். இந்த நிலையில் அந்தப் பெண் கா்ப்பமடைந்தாா். ஆனால், அவரை திருமணம் செய்யாமல் கருவை கலைக்கக் கூறி மணிகண்டன் மாத்திரை வாங்கிக் கொடுத்தாராம். தற்போது அந்தப் பெண் நிறைமாத கா்ப்பிணியாக உள்ளாா்.
Advertisement
இதையறிந்த அந்தப் பெண்ணின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்மகரம் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகிறாா்.