முகப்பு
கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

வடலூா் அருகே காய்கறி வியாபாரியின் வீட்டுக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், பணம் திருடிய மா்ம நபா்களை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

வடலூா் அருகே காய்கறி வியாபாரியின் வீட்டுக் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகள், பணம் திருடிய மா்ம நபா்களை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் பேரூராட்சி, ஆபத்தாரணபுரம் வள்ளிகந்தன் நகரில் வசிப்பவா் சரஸ்வதி (40). காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் கடந்த 30-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.51 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்ததாம்.

நிகழ்விடத்தில் நெய்வேலி டிஎஸ்பி என்.ராஜேந்திரன், வடலூா் காவல் ஆய்வாளா் வீரமணி ஆகியோா் விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் 2 தனிப் படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →