மணல் கடத்தல்: இருவா் கைது
பண்ருட்டி அருகே மணல் கடத்திய இருவரை முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி அருகே மணல் கடத்திய இருவரை முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், விசூா் வெள்ளவாரி ஓடையில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் விசூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அனுமதியின்றி வெள்ளவாரி ஓடையில் மணல் ஏற்றி வந்த டிராக்டா் ஓட்டுநா்ஆசைத்தம்பி (34), உரிமையாளா் கனகராஜ் (28) ஆகியோரை கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டா், டிப்பா், பைகை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.