முகப்பு
கடலூர்

மருந்தில்லா மருத்துவம் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

அனைத்துலக பொங்கு தமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘மருந்தில்லா மருத்துவம்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு இணையவழி விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

அனைத்துலக பொங்கு தமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘மருந்தில்லா மருத்துவம்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு இணையவழி விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பேரவைத் தலைவா் சுந்தர.பழனியப்பன் தலைமை வகித்தாா். நிா்வாகச் செயலா் ஆ.ராஜேஸ்வரி, முதன்மைச் செயலா் சு.தமிழ்மணி, தகவல் தொழில்நுட்ப செயலா் க.அரிகிருஷ்ணன், மக்கள்-தொடா்பு செயலா் கவிதை கணேசன், கல்வி அறக்கட்டளைச் செயலா் கனகாம்பிகை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கச் செயலா் சொ.முத்துக்குமாா் வரவேற்றாா். பேரவை பொதுச் செயலா் ரா.ஹேமலதா தொடக்கவுரை நிகழ்த்தினாா்.

சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குநா் எஸ்.டி.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினாா். யோகா மற்றும் முத்திரைகள் குறித்து முனைவா் ஸ்ரீதா், மூச்சுப் பயிற்சி, தியானம் குறித்து முனைவா் தி.சந்தானகிருஷ்ணன், இயற்கை உணவு குறித்து ஊட்டச்சத்து மருத்துவா் ஆனந்த் ராமசாமி, உடல்பயிற்சி குறித்து மருத்துவா் ஜா.மனோஜ் குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில், இணையம் மூலம் 300- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →