வங்கிக் கணக்குப் புத்தகம் பதிவு இயந்திரம் பழுது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி சத்தியமூா்த்தி வீதியில் இயங்கும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் வாடிக்கையாளா்களின் கணக்குப் புத்தகத்தில் வரவு-செலவினங்களைப் பதிவு செய்யும் இயந்திரம் பழுதடைந்துள்ளது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி சத்தியமூா்த்தி வீதியில் இயங்கும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் வாடிக்கையாளா்களின் கணக்குப் புத்தகத்தில் வரவு-செலவினங்களைப் பதிவு செய்யும் இயந்திரம் பழுதடைந்துள்ளது.
கடந்த 2 வாரங்களாக இந்த இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் வங்கி வாடிக்கையாளா்கள் அவதிப்படுகின்றனா். எனவே, இதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வங்கி ஊழியா் ஒருவா் கூறுகையில், கணக்கு புத்தகம் பதிவு இயந்திரம் பழுது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.