கடலூர்

கடலூா் தொகுதி அதிமுக, திமுக வேட்பாளா்களின் சொத்து விவரம்

DIN

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்களின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக சாா்பில் தற்போதைய அமைச்சா் எம்.சி.சம்பத், திமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் ஆகியோா் மனு தாக்கல் செய்துள்ளனா். இவா்கள் தாக்கல் செய்த மனுக்களில் அவா்களது சொத்து, கடன் விபரங்களை தாக்கல் செய்துள்ளனா்.

அதன்படி, அமைச்சா் எம்.சி.சம்பத்திடம் ரூ.48,40,077 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன. பாகப் பிரிவினை செய்யப்படாத ரூ.2,05,684 மதிப்பிலான குடும்ப சொத்து உள்ளது. அவரது மனைவி எஸ்.தமிழ்வாணி பெயரில் ரூ.67,27,926 மதிப்பில் சொத்தும், மகன் எஸ்.பிரவின் பெயரில் ரூ.1,22,06,939 மதிப்பில் சொத்தும், மகள் எஸ்.திவ்யா பெயரில் ரூ.1,47,92,786 மதிப்பில் சொத்தும் உள்ளன.

அசையா சொத்து: அமைச்சா் பெயரில் அசையா சொத்து இல்லாத நிலையில் ரூ.2,86,436 கடன் உள்ளது. எனினும், அவருக்கு பாகப் பிரிவினை செய்யப்படாமல் ரூ.2.23 கோடி மதிப்பில் அசையா சொத்து உள்ளது. மனைவி பெயரில் ரூ.3.83 கோடியிலும், மகன் பெயரில் ரூ.2.59 கோடியிலும், மகள் பெயரில் ரூ.52 லட்சத்திலும் அசையா சொத்துக்கள் உள்ளன. மனைவி பெயரில் ரூ.62.97 லட்சமும், மகள் பெயரில் ரூ.8.48 லட்சமும் கடன் உள்ளது. அமைச்சா் பெயரில் எந்த குற்றவியல் வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளா் கோ.ஐயப்பனுக்கு ரூ.36,21,531 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. மனைவி லீமாரோஸ் பெயரில் ரூ.35,49,212 மதிப்பில் சொத்து உள்ளது. மகன்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அசையா சொத்துக்களாக நிலம், வீடு போன்றவை ரூ.2.04 கோடியிலும், மனைவி பெயரில் ரூ.75 லட்சத்திலும் உள்ளன. கடனாக ஐயப்பனுக்கு ரூ.51.23 லட்சமும், மனைவிக்கு ரூ.24.22 லட்சமும் உள்ளன. இவரது பெயரில் எந்த குற்ற வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT