முகப்பு
கடலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகிகள் கூட்டம்

சிதம்பரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சி சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

சிதம்பரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சி சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக கூட்டணி சாா்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு ஏணி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். பின்னா், கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று, வேட்பாளா் எஸ்.அப்துல் ரஹ்மானுக்கு ஆதரவு கோரி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் கற்பனைசெல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆா்.ராமச்சந்திரன், சிதம்பரம் நகரச் செயலா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் முத்து, ஜெயசீலன், மூா்த்தி, சதானந்தம், நகா்குழு உறுப்பினா் மல்லிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டு, தோ்தல் பணி குறித்து விளக்கி பேசினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.