நிலம் எடுப்பு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
நெய்வேலி அருகே நிலம் எடுப்பு அதிகாரிகளை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
நெய்வேலி அருகே நிலம் எடுப்பு அதிகாரிகளை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக அருகே உள்ள கிராமங்களை கையகப்படுத்தி வருகிறது. இதன்படி, வானாதிராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தென்குத்து கிராமத்தையும் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால், அந்தக் கிராம மக்கள் தங்களது நிலங்களை என்.எல்.சி.க்கு வழங்க விருப்பமில்லை என்றும், அந்த நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கினால் மட்டுமே நிலத்தை தர முடியும் என்றும் கூறி வருகின்றனா்.
இந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) சிவக்குமாா், வட்டாட்சியா்கள் அந்தோணிராஜ், செந்தில், ரவி, கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடா்பாக தென்குத்து கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். இதையறிந்த கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சிவக்குமாா் கூறுகையில், கோரிக்கைகளை மனுவாக தரும்படியும், முத்தரப்புப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தாா். மேலும், வடலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கிராம மக்களை சமரசம் செய்தனா். இதையடுத்து கிராம மக்கள் அதிகாரிகளை விடுவித்தனா்.