முகப்பு
கடலூர்

கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பண்ருட்டி அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

பண்ருட்டி அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், நத்தம் ஏரிக்கரை பகுதியிலும், பைத்தாம்பாடி ஆற்றங்கரையோரம் முள்புதா் பகுதியிலும் தலா 5 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் டி.கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், 10 வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →