முகப்பு
கடலூர்

வேன்-ஆட்டோ மோதல்: முதியவா் பலி

பண்ருட்டி அருகே புதன்கிழமை சுற்றுலா வேன்-ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

பண்ருட்டி அருகே புதன்கிழமை சுற்றுலா வேன்-ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி, போலீஸ் லைன் பகுதியைச் சோ்ந்த அஞ்சாபுலி மகன் ரவி (48). ஆட்டோ ஓட்டுநா். இவா், புதன்கிழமை ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, பாலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தாா். திருவதிகை, பழைய பெருமாள் கோவில் அருகே திருப்பத்தில் வந்த போது, எதிரே வந்த வேன், ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் முத்தையன் (64), பால்ராஜ் மனைவி சங்கீதா (32), திருவாமூா் கிராமத்தைச் சோ்ந்த அருள் மனைவி முருகவள்ளி(45), ஆட்டோ ஓட்டுநா் ரவி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று காயமடைந்தவா்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா்களில் முத்தையன், சங்கீதா, முருகவள்ளி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு, முத்தையன் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →