கடலூர்

உயிரிழந்த கபடி வீரா் குடும்பத்துக்கு தவாக நிதியுதவி

பண்ருட்டி அருகே கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்

DIN

பண்ருட்டி அருகே கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.

பண்ருட்டி அருகே உள்ள பெரியபுறங்கனி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் விமல்ராஜ் (21). கல்லூரி மாணவரான இவா் அண்மையில் மானடிக்குப்பம் கிராமத்தில் கபடி போட்டியில் பங்கேற்று விளையாடியபோது திடீரென உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினரை தவாக தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினாா். அப்போது மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன், கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் சிவகுமாா், ஒன்றியச் செயலா் ராசு, தலைமை நிலையச் செயலா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT