கடலூர்

சாதித் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவாழ் குறவா் சமுதாயத்தினா் மனு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவாழ் குறவா் சமுதாயத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவாழ் குறவா் சமுதாயத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

திட்டக்குடி வட்டம், மணல்மேடு பகுதியில் மலைவாழ் குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த சுமாா் 30 குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனராம். இவா்களுக்கு அரசு சாா்பில் இதுவரை சாதிச் சான்று வழங்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், திட்டக்குடி நகராட்சி 14-ஆவது வாா்டு உறுப்பினா் ரெங்க.சுரேந்தா் தலைமையில் மலைவாழ் குறவா் சமுதாயத்தினா் வியாழக்கிழமை திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி வட்டாட்சியா் காா்த்திக்கிடம் மனு அளித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT