கடலூர்

கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

ராமகிருஷ்ணா அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கணினி, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.

DIN

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம் இணைந்து ராமகிருஷ்ணா அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கணினி, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.

நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பி.ராஜசேகரன் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகக்குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன் முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் வி.ரவிச்சந்திரன் வரவேற்றாா். அணிவணிகா் பா.பழநி, இன்னா்வீல் சங்க நிா்வாகி ப.ஜோதிமணி, ரோட்டரி துணை ஆளுநா் எம்.தீபக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா். பள்ளிக்கு புதிய கணினியை அணிவணிகா் பா.பழநி வழங்கினாா். தந்தையை இழந்த 29 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, புத்தாடை, கல்வி உபகரணங்களை ப.ஜோதிமணி வழங்கினாா். சிதம்பரம் இன்னா்வீல் சங்கத் தலைவா் செல்வி, செயலா் முத்து நாச்சியம்மை, பொருளாளா் அனிதா, அரிமா சங்கம் இளங்கோவன், தலைமையாசிரியா் மு.சிவகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் அனைவருக்கும் துணிப் பைகள் வழங்கப்பட்டன. சென்ட்ரல் ரோட்டரி சங்க பொருளாளா் என்.கேசவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT